குடை வரையின் வெளிமுகப்பில் விநாயகரும் , கோவிலின் உள்ளே சிவலிங்கமும், இலகுலீசர் சிலைகளும் உள்ளது. இக்கோயில் அருகில் சிறு மண்டபத்தில் ஒரு பெண் தெய்வம் உள்ளது. அம்மண்டபம் தற்போது இடைச்சி மண்டபம் என அழைக்கப்படுகிறது. இக்கோவில் அருகில் நீர்ச்சுனைகள் உள்ளன. இவை தீர்த்தச்சுனை நீர் என அழைக்கபடுகிறது.
இந்த இடத்திற்கு போகும் வழியில் கண்மாயில் நீர் இருந்தால் நீரை கடந்து செல்வது சிரமம்.இதன் காரணமாக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடியவர்கள் கண்மாய் வரை வந்துவிட்டு பார்க்கமுடியாத ஏமாற்றத்துடன் செல்வர்.
இந்த பிரச்னையை தீர்க்க கிராம மக்கள் துணையோடு களமிறங்கிய ரமேஷ் என்பவர் தற்போது கரையை உயர்த்தும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.அவரைப்பற்றி அறிந்து கொள்ள இந்த லிங்கை சொடுக்கவும் http://www.dinamalar.com/news_detail.asp?id=1554800
நம் நாட்டின் பழமையையும் அருமையையும் அறிந்து கொள்ள விரும்புபவர் அனைவரும் காணவேண்டிய இடமே அரிட்டாபட்டி.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in
தற்போது கரையை உயர்த்தும் வேலையில் ஈடுபட்டுள்ளார்..... வசூல்... அப்புறம் குறி சொல்ல ஆளு வரும், ஆட்டோ வரும் கப்புள்ஸ் வருவாங்கோ அப்புறம் அப்புறம்தான் ......இந்த மலைக்கோயில் மட்டுமாவது அப்புடியே விடுங்கய்யா உங்களுக்கு புண்ணியம் ....